நிலவொளியில் மிதக்கும் கடலலை - அதில்
ஒற்றை சிறகாய் தவழும் மனசு.
செல்ல சில்மிஷங்களில் சிதறும்
சந்தோஷங்கள்.
வெறுப்புகளற்ற வாழ்க்கை ஒன்றே சாத்தியம் .
முழுநிலவில் கடலழகை
ரசித்து திரும்புகையில்
எதிர்படுகிறது
வயிறு ஒட்டிய கிழவியும்...
நெளிந்த பிச்சை பாத்திரமும்...