சுண்டகஞ்சி

*****************

இன்னாடா சுண்டகஞ்சி புட்ச்சா கீதுன்னு பாக்குறியா? நம்மாளுங்கோ அல்லாரும் காக்டைல், கொத்து பரோட்டா, அவியல், ஊறுகாய் ன்னு கூவி கூவி குடுத்து இம்சை பண்றாங்கப்பா . நம்மலான்டையும் கீற ஆறிப்போன சுண்டகஞ்சிய உங்களவிட்டா யாருப்பா குடிப்பா ? உன் தலைஎழுத்து என்னாண்ட மாட்டினுகீர... இதை படிக்கிற மக்களே உங்கள நீங்கதான் காப்பாத்திகினும். கண்டிப்பா நீ நினைக்கிற கிக் கொஞ்சமாவது கிடைக்கும்னு நம்பினுகிறேன். பார்க்கலாம்.

**************************************************************

கட்ச்சியா ஒரு மாசமா நம்மளுக்கு அல்லாமே பேஜாரா புட்ச்சுபா. எந்த பந்தை எப்படி உருட்டி போட்டாலும் நம்ம விக்கெட் விளுந்துகினேகீது. அப்பால ''சுனா பானா ஒன்னுமில்லடா ஒன்னுமில்ல '' ன்னு இல்லாத மீசைய தடவிகினு போய்கினே இருப்போம். என்னான்ற ?

***************************************************************

அரைஅவரு பிலிம் பார்த்துகினு அதுக்கு ஒரு விமர்சனம் எழுதுற ஆளு நாம மட்டும் தான். நம்மளாண்டதான் மிஸ்டேக். மாயாண்டி - படத்துக்கு மொதநாளே யாரான்டையும் கேட்காமா போனதுதான் தலீவா பெரிய தப்பாயிடுச்சு. கரீட்டா அரை அவரு அப்பால முடியல. ஒரு எஸ் ஜெ சூர்யா வை சமாளிக்கவே மொத்த தமிழ்நாடும் தினரிகினு கீது . பத்து பேரா? எவனும் வரமாட்டான். மக்களே உங்கள நீங்கதான் காப்பாத்திகினும்.
(கேபிள் சங்கர் அண்ணே... பிற்காலத்துல நீங்களும் சேர்ந்து எங்களை சோதிச்சிடாதீங்க... உங்க மேல நிறைய நம்பிக்கை வைச்சிகினுகீறோம்.)

****************************************************************

துட்ட கொட்த்து , ஓட்ட வாங்கி , சீட்ட புட்ச்சி நம்மாளுங்க அல்லாரும் அவங்க அவங்க ஏரியா வில செட்டில் ஆயிட்டாங்க. இன்னும் ரோட்ல சினிமா போஸ்டரை பார்த்துகினு கனா கண்டுகினே போறான் இழிச்சவாயப்பய மக்கா... எதுவும் மாறப்போறதில்லை சுவத்தில ஒட்டுற சினிமா போஸ்டரை தவிர.... மக்களே உங்கள நீங்கதான் காப்பாத்திகினும்.

****************************************************************

பதிவர் சங்கத்தில என்னா நடக்குதின்னே தெர்லப்பா..! மாத்தி மாத்தி கூவிகினுகீறாங்கோ... கலாசிகிறாங்கோ... திட்டிகிறாங்கோ... தீடீர்னு பிலிம் காட்டிகினுகீறாங்கோ... அப்பால திரும்பவும் அட்ச்சிகிறாங்கோ ... அடப்போங்கப்பா... எதும் சொல்றதுக்கே பயமா கீதுபா... ஆழம் பாக்கிறான்,
பப்ளிசிட்டி, வெண்ணை, விளக்கெண்ணை ன்னு புட்ச்சு புட்ச்சா வார்த்தைங்களை பார்க்கிறோம். போதாகொறைக்கு ஜாதி பேரை வேற சொல்லி திட்றாங்கலாம். என்னவோ நாலு பேருக்கு நல்லது நடக்கும் னா எல்லாத்தையும் அட்ஜஸ்டிக்கலாம். கட்ச்சியா பதிவர் மக்களே உங்கள நீங்கதான் காப்பாத்திகினும். என்னான்ற...?

****************************************************************

இத்தனை இம்சையிலும் புட்ச்சா கொஞ்சூண்டு எழுதினதும் , காலையிலேயே கொஞ்ச நாளா ரன்னிங் போய்கினு கீறதும் மட்டும் தான் உருப்படி. வரட்டா நைனா...?

*******************************


7 comments:

விக்னேஷ்வரி said...

சுண்டக்கஞ்சி நெல்லை தமிழில் போனால் நல்ல சூடு கஞ்சியாக இருக்கும்.
உங்கள் சுண்டகஞ்சிக்கு வாழ்த்துக்கள் வசந்த்.

நையாண்டி நைனா said...

அடிச்சிட்டு ஆடு மாப்பி.

நையாண்டி நைனா said...

சாரி.... அடிச்சி ஆடு மாப்பி

shanmuga raman said...

அண்ணாச்சி ! நம்ம ஊர் பாசையை develope பண்ணுங்க..

வசந்த் ஆதிமூலம் said...

தாங்க்ஸ் விக்னேஷ்வரி .

வசந்த் ஆதிமூலம் said...

தாங்க்ஸ் மாப்ள...

வசந்த் ஆதிமூலம் said...

எலே ராமா... நல்லாயிருக்கியால?