மலர்களின் வாசத்திலும்
நெஞ்சு கரிக்கும்.
நெளிந்து படரும் புகையில்
இடரும் பல ஞாபகங்கள்..!
எவருக்கோ காத்திருந்தபடி
நத்தையாய் நகரும் மணித்துளிகள்.
சின்ன சின்ன விசும்பல்கள்
பெருங்கூக்குரலிடும் அவ்வப்போது.
வெளிச்சத்தை வெறித்தபடி
உறைந்திருக்கும் பல்லி.
கனன்று கொண்டிருக்கும் நெருப்பு.
முடியவே முடியாதா..? என்றொரு பொழுது.
ஒவ்வொருவருக்குமிருக்கிறது.
மறக்கமுடியாததானவொரு
மயான இரவு.
நெஞ்சு கரிக்கும்.
நெளிந்து படரும் புகையில்
இடரும் பல ஞாபகங்கள்..!
எவருக்கோ காத்திருந்தபடி
நத்தையாய் நகரும் மணித்துளிகள்.
சின்ன சின்ன விசும்பல்கள்
பெருங்கூக்குரலிடும் அவ்வப்போது.
வெளிச்சத்தை வெறித்தபடி
உறைந்திருக்கும் பல்லி.
கனன்று கொண்டிருக்கும் நெருப்பு.
முடியவே முடியாதா..? என்றொரு பொழுது.
ஒவ்வொருவருக்குமிருக்கிறது.
மறக்கமுடியாததானவொரு
மயான இரவு.

0 comments:
Post a Comment