கல்லா பொட்டியும் காந்தி நோட்டும் . . .

இரண்டு நாளைக்கு முன்னாடி நண்பரோட பாண்டி பஜார் ல இருக்கிற raymond's showroom
போயிருந்தேன் . இவனுக்கென்ன அங்க வேலைனு யோசிக்காதீங்க . நண்பரோட திருமணம் அவர் பர்சேஸ் . நாம சும்மா உப்புக்கு சப்பாணி . இப்டியெல்லாம் போனதானே அந்த மாதிரி இடத்தையும் பார்க்க முடியுது . (மத்தபடி கோட் , சூட் க்கு நாம பரம எதிரி )

நைட் ஒன்பது மணி . சில்லுனு ஏ சி . பின்னணியில ஹிந்தி சாங்ஸ் . நல்லாதான் போயிட்டு இருந்தது . திடீர் ன்னு தேசிய கீதம் ஒலிக்க ஆரம்பிச்சுது . மெதுவா எழுந்திருச்சி நின்னுகிட்டேன் . மனசுக்குள்ள ஒரு சின்ன சந்தோசம் . அடடா தேசிய கீதம் போட்டபின்னாடிதான் கடையை மூடுவங்கன்னு . நிமிர்ந்து பார்த்தா அவனவன் வேலையை பார்த்துட்டு இருக்கான் . எவனும் தேசிய கீதம் பாடுறத கண்டுக்கவே இல்லை. ஹிந்தி சாங்ஸ் , பாப் சாங்ஸ் வரிசையில தேசிய கீதத்தையும் டியூன் நல்லா இருக்குதுன்னு சேர்த்துட்டாங்க போல இருக்கு .

பாட்டு முடியிற வரை பொறுமையா இருந்துட்டு கல்லா கட்டிட்டு இருந்தவரை ஒரு பிடி பிடிச்சேன் . '' If you are not respecting the national anthem or if you are misuse the song it's a crime '' நான் கேட்டதற்கு எந்த பதிலும் தரவில்லை உரிமையாளர் . திரும்பவும் நான் கொஞ்சம் சத்தமா பேச '' sorry நான் கவனிக்கல '' சிரித்தபடியே சொன்னார் காந்தி நோட்டுகளை எண்ணியபடி .....


1 comments:

Anonymous said...

newboys88@gmail.com

priyan_anandhan@yahoo.com

nanbare these are my email address.

Anandhan-Tamil Oodagam