அடர்ந்த காடு


அடர்ந்திருக்கும் காடு
எந்நேரமும் இருண்டேகிடக்கிறது
அங்கங்கு சிதறும் ஒளியிலும்
புதைந்தே கிடக்கும் மர்மங்கள் ;

ரசித்து உள்நோக்கையில்
மனமயங்கும் சுவாரஸ்யம்.

உட்செல்வதாய் நினைத்து
கனவிலிருக்கும் மனசு ;
நிஜமுகம் மறக்கும்
ஒன்றுமற்ற மர்மங்களுடன் ..

விடை தெரியாமலேயே இருக்கிறது
அடர்ந்த காட்டின்
இறுகிய மனம்...


0 comments: